இணைய ஆற்றுப்படை அறிமுகம்: பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்

 

பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்

 நான் போற்றி மதிக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுள் முனைவர் கு. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் முதன்மையானவர். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். இவர்தம் நினைவாற்றலையும், நேர மேலாண்மையையும், பேச்சாற்றலையும், தமிழ்ப் புலமையையும், நண்பர்களைப் போற்றும் பெரும் பண்பையும் எண்ணி எண்ணி வியப்பதுண்டு

 உலகம் முழுவதும் சென்று தமிழின் சிறப்பைப் பல முனைகளில் எடுத்துரைத்து வருபவர். தம் அயலகச் செலவு, பட்டிமன்றப் பணிகள், திரைத்துறைப் பணிகள், தொலைக்காட்சிப் பணிகள், இணையதளப் பங்களிப்புகளுக்கு இடையிலும் என்னின் இணைய ஆற்றுப்படை என்ற நூலினைப் படித்து, என்னை ஊக்கப்படுத்தும் வகையில் அரியதொரு நூல் அறிமுகவுரையை வழங்கியுள்ளார்கள்

 பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் தாயுள்ளத்தைப் போற்றி, நன்றி தெரிவிக்கின்றேன்

 பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் ஐயாவின் வாய்மொழியாக இணைய ஆற்றுப்படை நூலறிமுகத்தை நீங்களும் செவிமடுக்கலாம். 

 இணைப்பு

Comments

Popular posts from this blog

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!