எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் படைப்பு நூல்கள் வழியாகவும் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகவும் தமிழுலகத்தின் பெருமைக்குரிய படைப்பாளராக மதிக்கப்படுபவர் . அண்மையில் கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் என் “ தகைசால் தமிழ்த் தொண்டர்கள்” நூலினை வெளியிட, திரு. பாவண்ணன் அவர்கள் அந்த நூலின் முதல்படியைப் பெற்றுக்கொண்டு பெருமைசேர்த்தார். நூலின் சிறப்பினை “புக் டே” ( bookday.in) இணையத்தளத்தில் அறிமுகம் செய்து எழுதி, என் முயற்சியை ஊக்கப்படுத்தியுள்ளார். எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கும், நூல் அறிமுகத்தை வெளியிட்டு உதவிய bookday.in இணையத்தளத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. புக் டே இணையத்தளத்தின் இணைப்பு: இங்கே