வலைத்தமிழ் பன்னாட்டு இதழில் (2024 ஆகத்து) இணைய ஆற்றுப்படை குறித்த அறிமுகம் வெளிவந்துள்ளது. இதழாசிரியர் வலைத்தமிழ் பார்த்தசாரதி ஐயா அவர்களுக்கு எம் நன்றி.
முனைவர் மு.இளங்கோவன் எழுதிய ‘தொல்காப்பியத் தொண்டர் நெல்லை இரா.சண்முகம் (கோலாலம்பூர்)’ - நூல் அறிமுகம் தமிழின் தொன்மைநூலான தொல்காப்பியத்தை இலக்கணம் சார்ந்த நூலாக மட்டுமே சுருக்கிப் பார்க்கிற ஒரு பார்வை இன்றைய இளைஞர்களிடையில் வளர்ந்து நிற்கிறது. ஆனால் அது மிகமுக்கியமான வாழ்வியல் நூல் என்பதையும் அது எழுதப்பட்ட காலத்திலிருந்து பல தலைமுறையினரைக் கடந்து பலராலும் படிக்கப்பட்ட நூல் என்பதையும் பலர் மறந்துவிடுகின்றனர். ஆயினும் தமிழின் நல்லூழாக, தொல்காப்பியத்தை மறக்காதவர்களாகவும் அதை வாழ்வியல் நெறிநூலாக நினைப்பவர்களும் இன்றும் பலர் நம்மிடையில் வாழ்ந்துவருகின்றனர். அத்தகையோர் தொல்காப்பியத்தை ஆர்வத்தோடு மீண்டும் மீண்டும் விரும்பிப் படிப்பது மட்டுமன்றி, தேடி வருபவர்களுக்கு கற்பிக்கவும் செய்கின்றனர். புதுச்சேரியைச் சேர்ந்த ஆய்வாளரான மு.இளங்கோவன் தொல்காப்பியத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் பேராசிரியர். தற்செயலாகத் தமக்குப் பார்க்கக் கிடைத்த ‘தொல்காப்பியம்: மக்கள் வாழ்வின் இலக்கணம்’ என்னும் நூலின் வழியாக, அதன் ஆசிரியரான நெல்லை இரா.சண்முகம் என்பவரைப்பற்றி அவர் தெரிந்துகொண்...
எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் படைப்பு நூல்கள் வழியாகவும் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகவும் தமிழுலகத்தின் பெருமைக்குரிய படைப்பாளராக மதிக்கப்படுபவர் . அண்மையில் கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் என் “ தகைசால் தமிழ்த் தொண்டர்கள்” நூலினை வெளியிட, திரு. பாவண்ணன் அவர்கள் அந்த நூலின் முதல்படியைப் பெற்றுக்கொண்டு பெருமைசேர்த்தார். நூலின் சிறப்பினை “புக் டே” ( bookday.in) இணையத்தளத்தில் அறிமுகம் செய்து எழுதி, என் முயற்சியை ஊக்கப்படுத்தியுள்ளார். எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கும், நூல் அறிமுகத்தை வெளியிட்டு உதவிய bookday.in இணையத்தளத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. புக் டே இணையத்தளத்தின் இணைப்பு: இங்கே
Comments
Post a Comment