Posts

Showing posts from August, 2024

எழுத்தாளர் பாவண்ணன் பார்வையில் இணைய ஆற்றுப்படை

Image
  நூலின் தகவல்கள் : நூல் : இணைய ஆற்றுப்படை ஆசிரியர் : மு . இளங்கோவன் பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம் இடைக்கட்டு , உள்கோட்டை ( அஞ்சல் ), கங்கைகொண்ட சோழபுரம் வழி , அரியலூர் மாவட்டம் – 612901 விலை : ரூ .100  அறிவுப்பெட்டகத்தின் வரலாறு    ஆற்றுப்படை இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று . ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் அல்லது வழிப்படுத்துதல் என்று பொருள் . ஓர் அரசனையோ அல்லது வள்ளலையோ சந்தித்து தன் வறுமையைப் போக்கிக்கொள்ளும் விதமாக போதுமான செல்வத்தைப் பெற்றுவந்த ஒருவர் திரும்பி வரும் வழியில் சந்திக்க நேரும் கூத்தர் , பாணர் , பொருநர் , விறலி முதலியோரிடம் அவருடைய சிறப்புகளையெல்லாம் எடுத்துரைத்து அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை . பத்துப்பாட்டுத் தொகுப்பில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன . கால ஓட்டத்தில் மரபுவழிப்பாடல்கள் குறையக்குறைய , இந்த வகைமையிலான பாடல்களை எழுதுவதும் நின்றுவிட்டது .   என் கல்லூரிக்காலத்தில் பாவலர் ம . இலெ . தங்கப்பா எழுதி...

இணைய ஆற்றுப்படை அறிமுகம்: பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்

Image
  பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்  நான் போற்றி மதிக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுள் முனைவர் கு . ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் முதன்மையானவர் . மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் . இவர்தம் நினைவாற்றலையும் , நேர மேலாண்மையையும் , பேச்சாற்றலையும் , தமிழ்ப் புலமையையும் , நண்பர்களைப் போற்றும் பெரும் பண்பையும் எண்ணி எண்ணி வியப்பதுண்டு .   உலகம் முழுவதும் சென்று தமிழின் சிறப்பைப் பல முனைகளில் எடுத்துரைத்து வருபவர் . தம் அயலகச் செலவு , பட்டிமன்றப் பணிகள் , திரைத்துறைப் பணிகள் , தொலைக்காட்சிப் பணிகள் , இணையதளப் பங்களிப்புகளுக்கு இடையிலும் என்னின் இணைய ஆற்றுப்படை என்ற நூலினைப் படித்து , என்னை ஊக்கப்படுத்தும் வகையில் அரியதொரு நூல் அறிமுகவுரையை வழங்கியுள்ளார்கள் .   பேராசிரியர் முனைவர் கு . ஞானசம்பந்தன் அவர்களின் தாயுள்ளத்தைப் போற்றி , நன்றி தெரிவிக்கின்றேன் .   பேராசிரியர் கு . ஞானசம்பந்தன் ஐயாவின் வாய்மொழியாக இணைய ஆற்றுப்படை ...

இணைய ஆற்றுப்படை நூலுக்கு அறிஞர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள் வழங்கிய சிறப்புப் பாயிரம்…

Image
  யான் எழுதிய இணைய ஆற்றுப்படை என்ற நூல் “ மெல்லவே கருவிருந்து ” உருவாகிய நூல் . 563 ஆசிரியப்பா அடிகளில் வெளிவந்திருக்கும் இந்த நூல் தமிழ்ப் புலவர்கள் , பேராசிரியர்கள் , தமிழ் ஆர்வலர்கள் , இணையத்துறை வல்லுநர்கள் , படைப்பாளிகள் கையினுக்குச் சென்று சேர்ந்தவண்ணம் உள்ளது .    என் நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் அண்மையில் இணைய ஆற்றுப்படை நூலினைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறையின் மேனாள் தலைவர் முனைவர் கு . வெ . பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களின் பார்வைக்கு வைத்தார்கள் . சங்கநூல் பயிற்சியும் , இலக்கணப் பெரும்புலமையும் , தமிழ் மரபறிவும் , மொழிபெயர்ப்பாற்றலும் , நாவன்மையும் , சால்பும் கொண்ட நம் பேராசிரியர் பெருந்தகை கு . வெ . பா . ஐயா அவர்கள் இணைய ஆற்றுப்படையைக் கற்றுதுடன் அமையாமல் ஒரு சிறப்புப் பாயிரம் வரைந்து நூலைப் பற்றியும் நூலாசிரியனைப் பற்றியும் பாராட்டி அனுப்பினார்கள் . அவர்களின் கேண்மையை நினைந்து நினைந்து மகிழ்வில் திளைத்து வருகின்றேன் .  “ நாடுநா டெனப்பறந் தெங்கணும் தமிழைப் ...

வாழ்த்துவம் இனிதே! - புலவர் ப.எழில்வாணன்

Image
  வாழ்த்துவம் இனிதே! புலவர் ப.எழில்வாணன் பள்ளபட்டி உயர்தமிழ் என்றும் உலகை ஆள அயர்வு நீக்கி அறிவியல் நோக்கில் ஆற்றல் மிகைத்தே அதிக உழைப்பில் போற்றும் வண்ணம் புதுமை தேக்கி, முனைவர் இளங்கோ வனார்தாம் முயன்று முனைப்பாய் ஆக்கிய வினைபுரி நூல்தான் இணைய ஆற்றுப் படையெனும் இந்நூல்! இணைய மறுப்பார் தமையும் இணைக்கத் துணைபுரி நூலிதாம்; தொழில்சார் நுட்பம் அனைய செய்திகள் பொதிந்த புலநூல்! இணையம் நோக்கி ஆற்றுப் படுத்தும் புணைநேர் நூல்தான் புரிந்து கொள்வீர்! ஆற்றுப் படைநூல் வரிசையில் அருமை ஏற்றி மாற்றங் கண்ட மணிநூல்! தமிழகச் சிறப்பு, தமிழர் எழுச்சி, தமிழினம் உலகம் போற்றத் தழைத்தமை, இலங்கைத் தமிழர் இன்னல்,  கொடுமை, வலங்கெழு தமிழர் மானம் காத்தமை, கணினி இணையம் கால்பதித் துள்ளமை, அணிசேர் தமிழ்க்கே அவற்றால் நன்மை இணையக் கழகம்,  வலையொளி இன்னன இணையிலா இமயமாய் இலங்கிட உழைத்த ஆற்றல் மிகையோர், அறிஞர், பெரியோர் ஆற்றிய கடமை அடிமுதல் நுனிவரை ஆழமாய், அழகாய் ஞாலமே போற்ற வேழமாய் இனிக்க விளக்கும் தெளிநூல்! அகவலில் ஐந்நூற் றறுபான் மூன்றடி தகவுடன் அமைந்த அகங்கொள் தமிழ்நூல்! இளங்கோ வனாரையும் இவர்தம் நூலையும் வள...